Saturday, August 11, 2018

2வது முறையாக நிரம்பிய மேட்டூர்.. விநாடிக்கு 1.10 லட்சம் கன அடி நீர் திறப்பு

சென்னை: மேட்டூர் அணை குறுகிய காலத்தில் 2வது முறையாக நிரம்பியுள்ளது. அணைக்கு அபரிமிதமான தண்ணீர் வரத்து உள்ளதால் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் லட்சம் கன அடி நீர் விநாடிக்கு வெளியாகிறது. இந்தத் தண்ணீர் தற்போது மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 80,000 கன அடி நீர் வெளியேறி வருகிறது.

No comments:

Post a Comment